சனி, 21 மார்ச், 2015

வீட்டு தோட்ட டிப்ஸ் !!

வீட்டு தோட்ட டிப்ஸ் !!
APHIDS அசுவுணி அல்லது செடிப்பேன் பச்சை நிற பூச்சிகள் செடிகளில் இருந்து தாக்கும் ..ஹோஸ் பைப்பால் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பாய்ச்சினால் இவை காணமல் போகும் .
இதற்க்கு இன்னொரு வழியும் உண்டு ..கைகளில் அகலமான DUCT டேப் அல்லது செலோ டேப்பின் ஒட்டும்பகுதி வெளிப்பக்கம் தெரியும்படி சுற்றி செடிகளின் இலை பகுதியில் கீழ்புறம் கையை துழாவி செல்ல இந்த பச்சை பூச்சிகள் பசையில் ஒட்டி வந்துவிடும் .
காய்களை வேகவைத்த நீரை இனி எறிய வேண்டாம்அந்த நீரை ..தொட்டி செடிகளுக்கு ஊற்றி பாருங்கள் வளரும் செடிகளுக்கு இது ஒரு சிறந்த சத்து நிறைந்த சூப் !!!!
சில வகை தாவரங்கள் அமிலத்தன்மை விரும்பும் ..அத்தகைய செடிகளுக்கு காபி தேனீர் கலக்கும்போது வடிகட்டிய துகள்களை நிலத்தில் மாதமொருமுறை தூவலாம் .
chamomile ..இதனை சீமை சாமந்தி என்பார்கள் இதில் இப்போது ஹெர்பல் தேநீரும் கிடைக்கிறது
இது சிறு நாற்று செடிகளை திடீரென காளான் பூஞ்சணம் தாக்குவதை தடுக்கவும் பயன்படுகின்றது .
சிறிது சீமைசாமந்தி தீநிரை இளம் செடிகளின் அருகில் மண்ணில் தெளித்து வர பூஞ்சை காளான் தாக்காது .
துரிதமாக மூலிகை தாவரங்களை காய வைக்க :)ஒரு செய்தித்தாளை காரின் பின்னிருக்கையில் விரித்து அதன்மேல் மூலிகை தாவரங்களை (HERBS )லாவண்டர்
பரப்பி வைத்து காரின் கதவுகளையும் சன்னல் கண்ணாடிகளையும் இருக்க மூடி வைக்கவும் ..
துரிதமாக காயும் மற்றும் வாகனமும் வாசமுடன் இருக்கும் .
உங்க தோட்டத்துக்கு பல வண்ண வண்ணத்து பூச்சிகள் வருகை தர ஒரு சிறு தட்டில் ஆப்பிள் /ஆரஞ்சு .வாழை அன்னாசி இவற்றில் சிறு துண்டுகளை வைங்க ..பல வர்ண வண்ணத்து பூசிகள் வருகை தரும் ..ஒரு வட்டம் ஆரஞ்சு சுளை வெட்டி கயிற்றில் கட்டி தொங்க விட்டாலும் நல்லது ..
தேனீக்களும் வண்ணத்து பூச்சிகளும் அழகிய தோட்டத்தில் மகரந்த சேர்க்கைக்கு இன்றியமையாதவை .